கழிவுநீர் கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்: நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?


கோவை திருச்சி சாலையில் உள்ள ராஜலட்சுமி மில்ஸ் பகுதியில் கழிவு நீர் கால்வாய் செல்கிறது. தெற்கு பகுதியின் பெரும்பகுதி கழிவு நீரை எடுத்து சென்று குளத்தேரி குளத்தில் விடும் கால்வாயில் தற்போது அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் கொட்டப்படுவதோடு, அப்பகுதி சரிவர தூர்வாரப்படாததால் கழிவு நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் அருகே பள்ளி உள்ளதால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், 'இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என்று தொடர்ந்து நாங்கள் கூறிவருகிறோம். ஆனாலும், இரவு நேரங்களில் சிலர் வந்து குப்பைகளை கொட்டிவிடுகின்றனர். இதனால் கடும் கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது. இங்கு குப்பத்தொட்டி இல்லாமல் இருப்பதால் தான் அதிக அளவு குப்பைகள் கால்வாயில் கொட்டப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து தொற்று நோய் பரவமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இப்பகுதி தூர்வாரப்பட வேண்டும்' என்றனர்.



இது குறித்து புகார் அளிக்க மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொண்டோம். ஆனால், தொலைபேசியை அவர் எடுக்கவில்லை. அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் நோய் தொற்றில் இருந்து அப்பகுதி மக்களை காப்பாற்ற முடியும்.



புகார் குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் பெயர் மற்றும் புகைப்படம் போன்ற விவரங்கள் கேட்ட போது, விவரங்கள் தர பயப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...