உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் சிக்னலில் 500 மரக்கன்றுகள் வழங்கும் விழா

பொதுமக்கள் சுற்றுச்சூழல் குற்றங்கள் ஏற்படாதவாறு மரங்களை அதிக அளவில் வளர்த்து பாதுகாக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.


கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறையும், ஊர்காவல் படையும் இணைந்து கோவை காந்திபுரம் சிக்னலில் 500 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில், கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் வடக்கு துணை ஆணையர் ஸ்டாலின் ஆகியோர் பங்ஏற்று பொதுமக்களுக்கு இன்று ஜூன்.5 மரக்கன்றுகளை வழங்கினர்.



மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் குறித்து எடுத்துரைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றிய கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தற்பொழுது குற்றங்களில் 2 வகை உள்ளது. ஒன்று கொள்ளை மற்றொன்று இணைய வழி குற்றம் என்று பொதுமக்களிடம் கூறினார்.

அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுச்சூழல் குற்றங்கள் ஏற்படும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுவித்தார். மரங்கள் வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றும், தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால் காவல்துறையினர் பாதுகாப்போடு ஆக்சிஜன் கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் மரங்களை விழிப்புணர்வோடு வளர்த்தால் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும் என்று கூறினார். மரங்கள் வளர்ப்பது மூலம் அதிக அளவில் மழை பெய்யும் என்றும், சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆக்சிஜன் அதிகளவில் கிடைத்து பொதுமக்கள் சுத்தமான காற்றை சுவாசித்து வாழ முடியும் என்று கூறினார். பொதுமக்கள் சுற்றுச்சூழல் குற்றங்கள் ஏற்படாதவாறு மரங்களை வளர்த்து அதனை பாதுகாத்து அனைவருக்கும் நன்மை ஏற்படுத்தும் வகையில் மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...