பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்

பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டன. அதனை வாங்குவதற்காக கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று ஜூன்.13 காலை முதலே சந்தை களைக்கட்டி இருந்தது.


கோவை: தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் உள்ள மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்களில் இந்த மாட்டு சந்தை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமைகளில் ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து நடைபெறுகிறது.

இந்த சந்தைக்கு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களாக சந்தை நாட்களில் 2 கோடி ரூபாய் அளவிற்கே வர்த்தகம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வருகிற 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி பொள்ளாச்சி மாட்டு சந்தை களைக்கட்டி இருந்தது. வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர். இதனால் இன்று ஜூன்.13 காலை முதலே சந்தை களை கட்டி இருந்தது.

இதனால் கேரள வியாபாரிகள் அதிகளவில் மாடு மற்றும் எருமைகளை வாங்கி சென்றனர். மாடுகள் வாங்க வந்தவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. கேரள வியாபாரிகள் அதிகளவில் மாடு மற்றும் எருமைகளை வாங்கி சென்றனர். மேலும் மாடுகள் வாங்க வந்தவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. ஆண்டுதோறும் அதிகளவில் மாடுகள் விற்பனை நடைபெறும் சந்தையாக பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...