வாயில் காயங்களுடன் குடியிருப்பு பகுதியில் நுழைந்த குட்டியானைக்கு ஆனைமலை சரணாலயத்தில் சிகிச்சை


கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றிவந்த மூன்று வயதுடைய குட்டியானை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீட்கப்பட்டு வனத்துறையினரால் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில், 70 சதவிகிதம் குணமடைந்த குட்டியானை கடந்த ஏப்ரல் 14ம் தேதியன்று பில்லூர் வனப்பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் காரமடை அருகேயுள்ள ஆதிமதியனூர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த அந்த குட்டி யானை மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. மேலும், ஆதிமதியனூர் குடியிருப்பு பகுதியில் இருந்த பலாமரத்தில் பழம் உண்பதற்காக அந்த யானை முயற்சித்துள்ளது. இதனால் அச்சமடைந்த அங்கிருந்த ஒரு குடியிருப்பு வாசிகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையிடம் புகார் அளித்தநிலையில், கால்நடை மருத்துவர் என்.எஸ்.மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் அந்த குட்டியானையை மையக்க ஊசி செலுத்தி கடந்த ஞாயிறன்று பிடித்தனர்.

தொடர்ந்து, டாப்சிலிப் ஆனைமலை புலிகள் சரணாலயம் வரகலியார் முகாமிற்கு அந்த யானை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, மாவட்ட வனத்துறை அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் கூறுகையில், தற்போது கோவை வனப்பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள யானை மிகவும் குட்டி. வனத்துறையினரால் சிகிச்சைகள் வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதை கும்கி யானையாக பயிற்சியளிக்கலாமா அல்லது வனப்பகுதியிலேயே விடலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...