நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட தபெதிக, எஸ்எப்ஐ அமைப்பினர்


மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வையே மீண்டும் நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தியும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.எப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் கடுமையாக கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.எப்.ஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வை மீண்டும் நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் கோசங்களை எழுப்பினர்.

மேலும், காவல்துறையினரின் தடையை மீறி கோவை ரயில் நிலையம் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஆர்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...