சிறுவாணி அணையின் நீர்மட்டம் 30 அடியாக உயர்வு: தொடர் மழையால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் 30 அடியாக உயர்ந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடரும் மழையால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.


கோவை: கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் 30 அடியாக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி ஆகும்.

மழை பொய்த்ததால் இந்தாண்டு துவக்கத்தில் 26 அடியாக இருந்த நீர் மட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையால் படிப்படியாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கடந்த ஜூலை 8ம் தேதி அடிவாரத்தில் 12 மி.மீ. மற்றும் அணைப்பகுதியில் 55 மி.மீ. மழை பதிவாகி நீர் மட்டம் 28 அடியாக உயர்ந்தது.

நேற்று (ஜூலை 13) காலை 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில் 17 மி.மீ. மழையும், அணைப்பகுதியில் 73 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்தது. தற்போது அணையில் இருந்து 5.88 கோடி லிட்டர் நீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இது கோவை மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...