கோவை TNAU-வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22-ல் நடைபெறுகிறது

கோவை TNAU-வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22-ல் நடைபெறுகிறது. 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 200 இடங்களுக்கான சரிபார்ப்பு நடைபெறும். பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஜூலை 23-ல் சரிபார்ப்பு நடத்தப்படும்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNAU-வில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு ஜூன் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் காலியிடங்களுக்கு நகர்வு அடிப்படையில், தரவரிசையில் அடுத்ததாக இடம் பெற்ற மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்புப் பணிகள் மொத்தம் 200 இடங்களுக்கு நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக சேர்க்கை பெற்ற மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், பட்டயப் படிப்புக்கான இணையவழி கலந்தாய்வில் பங்கேற்று ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு ஜூலை 23ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும் TNAU தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...