கோவையில் போக்குவரத்து மாற்றம்: மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 100 அடி சாலையில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் வழியில் மாற்றம் செய்ய உத்தேசம். மக்கள் கருத்து தெரிவிக்க காவல்துறை அழைப்பு.


கோவை: கோவை மாநகர காவல்துறை இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, 100 அடி சாலையில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் வாகனங்களுக்கான புதிய வழித்தடம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடம் பின்வருமாறு: காந்திபுரம் 100 அடி ரோடு ஷீலா மருத்துவமனை சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி, கொங்குநாடு மருத்துவமனை, கிராஸ்கட் ரோடு, வடகோவை மேம்பாலத்தின் வலது பக்கம் சர்வீஸ் ரோட்டில் திரும்பி பவர்ஹவுஸ் வழியாக சிவானந்தா காலனி மற்றும் 100 அடி ரோட்டிற்கு செல்லலாம். இந்த சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. மக்கள் தங்கள் கருத்துக்களை ஜூலை 31, 2024க்கு முன்பாக, 0422-2212567 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அவினாசி சாலையில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலப் பணிகள் காரணமாகவும், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் பொதுமக்கள் சிரமப்படுவதாக காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, ஆம்னி பேருந்து பயணிகள் ஏற்றும் இடங்களாக காந்திபுரம் மற்றும் டைடல் பார்க் ஆகிய இரண்டு இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து பேருந்துகளில் ஏற வேண்டும் என்றும், தாமதமாக வரும் பயணிகளுக்காக பேருந்துகளை நிறுத்தி வைக்க முடியாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் அதிக நேரம் சாலையில் நிறுத்தி வைக்கப்படுவது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...