மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டத்தை ஓஸ்மா சங்கம் வரவேற்பு

கோவையில், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் (ஓஸ்மா) சங்கத் தலைவர் அருள்மொழி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டத்தை வரவேற்றுள்ளார். இத்திட்டம் தொழில்துறைக்கு பெரிதும் பயனளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


கோவை: மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் மத்திய பட்ஜெட்டை வரவேற்பதாக ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் (ஓஸ்மா) சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் அருள்மொழி இன்று ஜூலை 23 அன்று வெளியிட்ட அறிக்கையில், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் திட்டம் தொழில்துறைக்கு மிகுந்த பயனளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பட்ஜெட்டில் MSME நிறுவனங்கள் இயந்திரங்கள் வாங்குவதற்குப் பிணை இல்லாமல் கடன் பெற வகை செய்துள்ளது மிகுந்த பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், MSME நிறுவனங்கள் கடனை திரும்பச் செலுத்தும் போது ஏற்படும் காலதாமதத்திற்கு Special Mention Account (SMA) அடிப்படையில் வங்கி நிதி உதவி செய்து வங்கிக் கணக்கு NPA ஆகாமல் தடுக்க உதவி புரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உற்பத்தித் துறையில் புதிதாக வேலைக்கு சேர்ப்பவர்களுக்கு முதல் மாத சம்பளத் தொகையை மத்திய அரசு வழங்கும் என்பது தொழில் துறைக்கு மிகுந்த பயனளிக்கும் என்று அருள்மொழி கூறியுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் திட்டமும் பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...