மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டத்தை ஓஸ்மா சங்கம் வரவேற்பு

கோவையில், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் (ஓஸ்மா) சங்கத் தலைவர் அருள்மொழி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டத்தை வரவேற்றுள்ளார். இத்திட்டம் தொழில்துறைக்கு பெரிதும் பயனளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


கோவை: மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் மத்திய பட்ஜெட்டை வரவேற்பதாக ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் (ஓஸ்மா) சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் அருள்மொழி இன்று ஜூலை 23 அன்று வெளியிட்ட அறிக்கையில், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் திட்டம் தொழில்துறைக்கு மிகுந்த பயனளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பட்ஜெட்டில் MSME நிறுவனங்கள் இயந்திரங்கள் வாங்குவதற்குப் பிணை இல்லாமல் கடன் பெற வகை செய்துள்ளது மிகுந்த பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், MSME நிறுவனங்கள் கடனை திரும்பச் செலுத்தும் போது ஏற்படும் காலதாமதத்திற்கு Special Mention Account (SMA) அடிப்படையில் வங்கி நிதி உதவி செய்து வங்கிக் கணக்கு NPA ஆகாமல் தடுக்க உதவி புரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உற்பத்தித் துறையில் புதிதாக வேலைக்கு சேர்ப்பவர்களுக்கு முதல் மாத சம்பளத் தொகையை மத்திய அரசு வழங்கும் என்பது தொழில் துறைக்கு மிகுந்த பயனளிக்கும் என்று அருள்மொழி கூறியுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் திட்டமும் பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...