வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளை கண்டித்து கோவையில் சட்ட ஆணையத்தின் பரிந்துரை நகலை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதி முறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சட்ட ஆணையம் வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்து பரிந்துரை நகலை வழங்கியுள்ளது.

இந்த விதிமுறைகள் வழகறிஞர்களின் உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளதாகக் கூறி இன்று கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற பணிகள் முடக்கியுள்ளன.

இந்நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக இன்று பிற்பகல் வழக்கறிஞர்கள் சட்ட ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ள நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளானது வழக்கறிஞர்கள் தொழில் செய்ய முடியாத படி அபராதம், சிறை தண்டனை போன்றவை கிடைக்கும் அளவிற்கு திருத்தங்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த திருத்தங்கள் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வழகறிஞர்கள் சார்பில் அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தில்லியில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...