பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் ரூ.40 கோடியில் நான்கு வழிச்சாலை பணி: அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பல்லடம் ரோட்டில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றும் இப்பணி காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரையிலும், காட்டம்பட்டி முதல் நெகமம் வரையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பணிகளை நேற்று (ஜூலை 23) கோவை வட்டம் நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் அளவு மற்றும் அதன் தரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். நான்கு வழிச்சாலை சிறப்பாக அமைய வேண்டிய முறைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், சாலை விரிவாக்கப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சரவணச் செல்வம், உதவி கோட்டப் பொறியாளர் அருணகிரி, அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இந்த நான்கு வழிச்சாலை திட்டம் நிறைவடையும்போது, பொள்ளாச்சி-பல்லடம் இடையேயான போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பயணம் எளிதாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...