டிஜே நினைவு சர்வதேச புகைப்பட போட்டி 2024: பரிசளிப்பு விழா மற்றும் கண்காட்சி கோவையில் நடைபெற்றது

கோவையில் டிஜே நினைவு சர்வதேச புகைப்பட போட்டி 2024 பரிசளிப்பு விழா நடைபெற்றது. 25 நாடுகளிலிருந்து 1538 பேர் பங்கேற்றனர். புகைப்பட கண்காட்சி ஆகஸ்ட் 4 வரை நடைபெறும்.



கோவை: லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (எல்.எம்.டபிள்யூ) நடத்தும் டிஜே நினைவு சர்வதேச புகைப்பட போட்டி (DJMPC) 2024-ன் பரிசளிப்பு விழா கோவையில் உள்ள கஸ்துாரி சீனிவாசன் கலாச்சார மையத்தில் 30 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலகம் முழுவதும் 25 நாடுகளிலிருந்து 1538 பேர் பங்கேற்று 6464 படங்களை சமர்ப்பித்தனர்.



போட்டிக்கான பதிவுகள் 2024 மே 1 முதல் ஜூன் 30 வரை www.djmpc.in வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. டெல்லியை சேர்ந்த ராஜேஷ் பேடி, சிங்கப்பூரை சேர்ந்த ஜெயினி மரியா மற்றும் ஜெயபிரகாஷ் போஜன் உள்ளிட்டோர் அடங்கிய நடுவர் குழு அமைக்கப்பட்டு தேர்வுகள் நடந்தன. கே. மருதாச்சலம் போட்டியின் ஆலோசகராகவும், விக்ரம் சத்யநாதன் நிர்வாகியாகவும் செயல்பட்டனர்.



இந்த ஆண்டு "இயற்கையின் புதுமை" மற்றும் "wild portraits" என இரு தலைப்புகளில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு பிரிவிலும் தேர்வு பட்டியலில் இடம் பெற்ற 10 பேருக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளன.

"இயற்கையின் புதுமை" பிரிவில் மும்பையைச் சேர்ந்த டாக்டர். திலிப் ஷா முதல் பரிசையும், சென்னையைச் சேர்ந்த கணபதி ராம் ஆர்.எஸ் இரண்டாம் பரிசையும் வென்றனர். "wild portraits" பிரிவில் கேரளா காயம்குளம் பகுதியைச் சேர்ந்த டாக்டர். மகேஷ் முதல் பரிசையும், கனடா நாட்டைச் சேர்ந்த தாமஸ் விஜயன் இரண்டாம் பரிசையும் வென்றனர்.



வெற்றி பெற்றவர்களுக்கு, எல்.எம்.டபிள்யு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு பரிசுத்தொகை வழங்கி கௌரவித்தார். இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை 10 லட்சம் ரூபாய் ஆகும். தொடர்ந்து, புகைப்பட கண்காட்சி ஆகஸ்ட் 4, 2024 வரை நடைபெறும்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...