மாணவர்களின் திறமையை வெளிபடுத்திய 'விங்ஸ் & விண்ட் 2017' ஏரோ மாடலிங் விமான நிகழ்ச்சி


ஸ்கை-ஹை அகாடமி, ஏரோ மாடலிங் ஹாப்பி ஜோன் மற்றும் ஜெட் ஏரோ ஸ்பேஸ் இணைந்து நடத்திய 'விங்ஸ் & விண்ட் 2017' என்னும் 3வது மாவட்ட அளவிலான ஏரோ மாடலிங் போட்டி மற்றும் கோயம்பத்தூரின் பிரதான ஏரோ மாடல் விமான நிகழ்ச்சி சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 6 மணி முதல் துவங்கி, மதியம் 1 மணி வரை நடைபெற்றது. நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை உதவி ஆணையாளர் ரகுபதி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். 



இது குறித்து ஸ்கை-ஹை அகாடமி நிறுவனர் கௌதம் பேசுகையில்; கோவையில் 'விங்ஸ் & விண்ட் 2017' என்னும் 3வது மாவட்ட அளவிலான ஏரோ மாடலிங் போட்டி மற்றும் ஏரோ மாடல் விமான நிகழ்ச்சி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு சக் க்ளைடர், கடப்புல்ட் க்ளைடர், கண்ட்ரோல் லைன் ஏரோபாட்டிக், ரிமோட் கண்ட்ரோல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. 



இதில் மாணவர்கள் தயாரித்த மாடல் விமானம் இங்கு கொண்டு வந்து அவர்களில் திறமை வெளிபடுத்தினார். இப்போட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வருமான வரித்துறை உதவி ஆணையாளர் ரகுபதி அவர்கள் முன்னிலையில் மாணவர்கள் தங்களில் படைபாற்றலின் திறமையை வெளிபடுத்தினர். இப்போட்டியில் கலந்து கொண்டு சிறந்த முறையில் திறம்பட செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுப் பொருள்கள் மற்றும் சான்றிதழ்கள் எங்கள் நிறுவனத்தின் சார்பில் வழக்கப்படும். காலை 6 மணி முதல் தொடங்கிய இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெளி மாநிலங்களிருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசுத் தொகையாக ரூ.3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ஆறுதல் பரிசும், போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதனை சிறப்பு விருந்தினர் வருமான வரித்துறை உதவி ஆணையாளர் ரகுபதி பரிசுப் பொருள்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாணவர்களை பாராட்டினார்.



இதில், ஸ்கை-ஹை அகாடமி நிறுவனர் சுதர்சன், ஏரோ மாடலிங் ஹாப்பி ஜோன் நிறுவனர் சந்திர பாபு மற்றும் ஜெட் ஏரோ ஸ்பேஸ் நிறுவனர்கள் பாலா மற்றும் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...