நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது என்ற மாநகராட்சி உத்தரவை தொடர்ந்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கோவை மாநகரில் சுமார் 2 ஆயிரம் தண்ணீர் லாரிகள் இயங்கி வருகிறது. இவர்கள் போர் மூலம் தண்ணீர் எடுத்து பொதுமகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். 



இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை மாநகராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு விதி 406- படி உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டதும் அதில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் அமைப்பு நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய கூடாது என்றும், தடையை மீறி நிலத்தடி நீரை உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.



மாநகராட்சியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை கோவை கொடிசியா வளாகத்தில் தங்களது லாரிகளை நிறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.

 

இந்த வேலை நிறுத்தத்தால் கோவை மாநகரில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...