கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்று தெரிந்துகொள்ள ஆர்வமுடன் கோவை ரசிகர்கள்!


எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி நாளை திரைக்கு வரவுள்ளது. உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் திரைப்படவுள்ள பாகுபலி படத்தின் 2-ம் பாகம் சுமார் ரூ.480 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை (நாளை) தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும். பாகுபலி 2 திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

கதைச் சுருக்கம்: மகிழ்மதி எனும் ராஜ்யத்திற்காக போராடும் சகோதரர்கள் பற்றிய கதை. கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்தினைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் 'பாகுபலி 2' நாளை வெளியாக உள்ளது. உலக சினிமாவின் தரத்தை உயர்த்தி எண்ணற்ற சாதனைகளை படைத்த இப்படத்தின் 2-ஆம் பாகத்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே காண காத்திருக்கிறது. சுமார் 2 நிமிடம், 23 வினாடிகள் வரும் டிரைலரில் மகிழ்மதி ராஜ்யம், தேவசேனா- அமரேந்திர பாகுபலியின் காதல், சகோதரத்துவம், பகை, பழிவாங்குதல் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.



பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ராணா ஆகியோரின் கண் பார்வையிலேயே நேர்த்தியான நடிப்பு வெளிப்படுவதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

பாகுபலி 2 இந்திய இயக்குநர்களால் மிகப்பெரிய பிரம்மாண்டமான கனவு திரைப்படங்களில் ஒன்றாக உருவாக்கபட்டுள்ளது. மேலும், இன்று தவிர்க்க முடியாத ஒரு படமாக இது இருக்குமானால் நாளை அது கிளாசிக் பட வரிசைகளில் இருக்கும் என எதிப்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கோவை ரசிகர்கள் கூறுகையில், இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மிகப் பிரம்மாண்டமான படம் பாகுபலி. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இந்தியா மட்டுமில்லாது உலக நாடுகளிலும் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.

இந்நிலையில், பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பாகுபலி 2' படத்தில் 'கட்டப்பா ஏன் பாகுபலி'யை கொன்றார்?' எனும் கேள்விக்கு விடை என்ன என்பதை காண காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்ப்பர்ப்பை அதிகரிக்கச் செய்யும் விதமாக படக்குழுவினர், 'பாகுபலி 2' குறித்து ஒவ்வொரு அறிவிப்பை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, இப்படத்தின் 2ஆம் பாகத்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே காண காத்திருக்கிறது. இப்படத்தை காணும் ஆர்வத்தில் டிக்கெட் எடுப்பதற்கு காலையில் இருந்து மாலை வரை நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்' என்றனர்.

கோவையில், அனைத்து திரையரங்குகளிலும் நாளை பாகுபலி 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் திரையரங்க டிக்கட் இணையதளங்கள் அனைத்திலும் டிக்கட் விற்றுத் தீர்ந்துவிட்டது. அனைத்து திரையரங்குகளிலும் கூட டிக்கட் 'ஹாஸ்புல்'. ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே ஓப்பன் டிக்கெட் விற்பனை ஆக உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பாகுபலி 2 திரைப்படம் 5 காட்சிகளாக திரையுடவுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...