கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்று தெரிந்துகொள்ள ஆர்வமுடன் கோவை ரசிகர்கள்!


எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி நாளை திரைக்கு வரவுள்ளது. உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் திரைப்படவுள்ள பாகுபலி படத்தின் 2-ம் பாகம் சுமார் ரூ.480 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை (நாளை) தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும். பாகுபலி 2 திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

கதைச் சுருக்கம்: மகிழ்மதி எனும் ராஜ்யத்திற்காக போராடும் சகோதரர்கள் பற்றிய கதை. கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்தினைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் 'பாகுபலி 2' நாளை வெளியாக உள்ளது. உலக சினிமாவின் தரத்தை உயர்த்தி எண்ணற்ற சாதனைகளை படைத்த இப்படத்தின் 2-ஆம் பாகத்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே காண காத்திருக்கிறது. சுமார் 2 நிமிடம், 23 வினாடிகள் வரும் டிரைலரில் மகிழ்மதி ராஜ்யம், தேவசேனா- அமரேந்திர பாகுபலியின் காதல், சகோதரத்துவம், பகை, பழிவாங்குதல் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.



பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ராணா ஆகியோரின் கண் பார்வையிலேயே நேர்த்தியான நடிப்பு வெளிப்படுவதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

பாகுபலி 2 இந்திய இயக்குநர்களால் மிகப்பெரிய பிரம்மாண்டமான கனவு திரைப்படங்களில் ஒன்றாக உருவாக்கபட்டுள்ளது. மேலும், இன்று தவிர்க்க முடியாத ஒரு படமாக இது இருக்குமானால் நாளை அது கிளாசிக் பட வரிசைகளில் இருக்கும் என எதிப்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கோவை ரசிகர்கள் கூறுகையில், இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மிகப் பிரம்மாண்டமான படம் பாகுபலி. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இந்தியா மட்டுமில்லாது உலக நாடுகளிலும் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.

இந்நிலையில், பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பாகுபலி 2' படத்தில் 'கட்டப்பா ஏன் பாகுபலி'யை கொன்றார்?' எனும் கேள்விக்கு விடை என்ன என்பதை காண காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்ப்பர்ப்பை அதிகரிக்கச் செய்யும் விதமாக படக்குழுவினர், 'பாகுபலி 2' குறித்து ஒவ்வொரு அறிவிப்பை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, இப்படத்தின் 2ஆம் பாகத்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே காண காத்திருக்கிறது. இப்படத்தை காணும் ஆர்வத்தில் டிக்கெட் எடுப்பதற்கு காலையில் இருந்து மாலை வரை நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்' என்றனர்.

கோவையில், அனைத்து திரையரங்குகளிலும் நாளை பாகுபலி 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் திரையரங்க டிக்கட் இணையதளங்கள் அனைத்திலும் டிக்கட் விற்றுத் தீர்ந்துவிட்டது. அனைத்து திரையரங்குகளிலும் கூட டிக்கட் 'ஹாஸ்புல்'. ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே ஓப்பன் டிக்கெட் விற்பனை ஆக உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பாகுபலி 2 திரைப்படம் 5 காட்சிகளாக திரையுடவுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...