குளங்களை தூர்வாரும் பணியில் சிறுதுளி


கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் சிறுதுளி அமைப்பு இன்று கோவையில் உள்ள மூன்று குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது.



கோவை மாவட்டம், பேரூர் அருகே உள்ள சங்கர நாராயண சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை மற்றும் நாகராஜபுரம் சாலையில் உள்ள மூன்று குளங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று அதனை தூர்வாரும் பணி நடபெற்று வருகிறது.



பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த பணிகளுக்கான நிதி உதவியை ரோட்டரி க்ளப் ஆப் கோயம்பத்தூர் சென்ட்ரல் மற்றும் ஜி.இ.ஆயில் நிறுவனங்கள் வழங்கின.



சுமார் ரூ.1.5 கோடி மதிப்பில் தூர்வாரப்படும் இந்த குளங்களில் இன்று காலை பூஜை நடைபெற்றது. இதில் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ரோட்டரி க்ளப் சென்ட்ரல் தலைவர் மாணிக்கம், ஜி.இ.ஆயில் நிறுவனத்தின் அதிகாரி பல்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து, குளங்களை தூர்வாரும் பணியில் சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாத காலத்திற்குள் இந்த குளம் தூர்வாரப்படும் என்றும் அடுத்த பருவமழையின் போது இந்த குளங்களில் நீர் தேங்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும் சிறுதுளி அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...