குளங்களை தூர்வாரும் பணியில் சிறுதுளி


கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் சிறுதுளி அமைப்பு இன்று கோவையில் உள்ள மூன்று குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது.



கோவை மாவட்டம், பேரூர் அருகே உள்ள சங்கர நாராயண சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை மற்றும் நாகராஜபுரம் சாலையில் உள்ள மூன்று குளங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று அதனை தூர்வாரும் பணி நடபெற்று வருகிறது.



பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த பணிகளுக்கான நிதி உதவியை ரோட்டரி க்ளப் ஆப் கோயம்பத்தூர் சென்ட்ரல் மற்றும் ஜி.இ.ஆயில் நிறுவனங்கள் வழங்கின.



சுமார் ரூ.1.5 கோடி மதிப்பில் தூர்வாரப்படும் இந்த குளங்களில் இன்று காலை பூஜை நடைபெற்றது. இதில் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ரோட்டரி க்ளப் சென்ட்ரல் தலைவர் மாணிக்கம், ஜி.இ.ஆயில் நிறுவனத்தின் அதிகாரி பல்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.



தொடர்ந்து, குளங்களை தூர்வாரும் பணியில் சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாத காலத்திற்குள் இந்த குளம் தூர்வாரப்படும் என்றும் அடுத்த பருவமழையின் போது இந்த குளங்களில் நீர் தேங்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும் சிறுதுளி அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...