கோவை அரசு போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்திய 'லிங்க் டிக்கெட்' வசதி

கோவை அரசு போக்குவரத்துக் கழகம் பயணிகளுக்காக 'லிங்க் டிக்கெட்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பயணிகள் முன்பதிவு செய்த பேருந்துகளுடன் நகர பேருந்துகளையும் இணைத்து பயணிக்க முடியும்.


கோவை: கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக 'லிங்க் டிக்கெட்' எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஸ்ரீதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில், கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து தொலைதூர வழித்தடங்களில் முன்பதிவு வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக, 'லிங்க் டிக்கெட்' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியின் கீழ், பயணிகள் முன்பதிவு டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.30 செலுத்தி, பேருந்து நிலையங்களில் இருந்து நகர பேருந்துகளில் வேறு இடங்களுக்குச் செல்லலாம். அதேபோல, வேறு இடங்களில் இருந்து இந்த மூன்று பேருந்து நிலையங்களுக்கும் செல்ல முடியும்.

இந்த 'லிங்க் டிக்கெட்' வசதியை காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும்போதோ அல்லது வந்திறங்கும்போதோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டல நகர பேருந்துகளில் இந்த வசதியை பயணிகள் தங்கள் பயண நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு அல்லது பின்பு பயன்படுத்தலாம். முன்பதிவு பயணச்சீட்டை நகல் எடுத்தோ, செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்தோ, நடத்துனரிடம் காட்டி பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...