தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாட்டம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை அடுத்து, கோவை சுந்தாராபுரத்தில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இது கட்சியின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.



கோவை: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை அடுத்து கோவை சுந்தாராபுரம் பகுதியில் தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தற்போது இந்த கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தவெக கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாறியுள்ளது.

நேற்று முதலே, தவெக தலைமையிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும், வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகுமாறும் கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.



இந்நிலையில், இன்று வெளியான விஜய்யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தவெக கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



இந்த அங்கீகாரத்தை அடுத்து தமிழகம் முழுவதும் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.



கோவையில், குறிப்பாக சுந்தாராபுரம் பகுதியில் தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...