கோவை: விநாயகர் சிலை கரைப்பு இடங்களின் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார். அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய பொதுமக்கள் மற்றும் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செப்டம்பர் 8 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் மூலம் மாசு ஏற்படுத்தாத சிலைகளை அப்புறப்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கோவை காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலையும் ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அவை:

1. முத்தண்ணன் குளம்

2. பவானி ஆறு (சிறுமுகை, பழத்தோட்டம், எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி)

3. அம்பராம் பாளையம் ஆறு (ஆனைமலை, காளிபாக் கவுண்டன்புதூர்)

4. நொய்யல் ஆறு (ராவுத்தூர் பிரிவு)

5. ஆச்சான் குளம்

6. நீலாம்பூர்

7. உப்பாறு (ஆனைமலை முக்கோணம் அருகில்)

8. நடுமலை ஆறு

9. வால்பாறை

10. சாடிவயல்

11. வாளையார் அணை

12. குறிச்சிக்குளம்

13. குனியமுத்தூர் குளம்

14. சிங்காநல்லூர் குளத்தேரி

15. வெள்ளக்கிணறு குளம்

16. நாகராஜபுரம் குளம்

17. பிஏபி வடிகால்

18. நூற்றாண்டு பிரிவு

19. சாமளாபுரம் குளம் (திருப்பூர் மாவட்டம்)

20. பிஏபி வடிகால், கெடிமேடு (திருப்பூர் மாவட்டம்)

மேற்கண்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பொதுமக்கள் விசர்ஜனம் செய்ய வேண்டும் என்றும், மேலும் போலீசார் அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...