சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரிப்பு

கோவை தொழில் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த மாவட்டம் மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலும் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இங்குள்ள முக்கிய சாலை அல்லது நெடுஞ்சாலையினை ஒருநாளைக்கு சராசரியாக லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகம் உடைய சாலையினை பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பயன்படுத்துவது வாகன ஓட்டிகளிடையே விபத்துகுறித்தான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



சாலையில் சுற்றித்திரியும் இவ்வாறான கால்நடைகளை யாரும் கண்டுக்கொள்வதில்லை. குறிப்பாக நாய்கள், மாடுகள், ஆடுகள், குதிரை போன்ற கால்நடைகள் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. திடீரென சாலையின் குறுக்கே வரும் கால்நடைகளால் விபத்துக்களும் அதிகம் நடக்கின்றன.

வாகனங்கள் மோதி நடக்கும் விபத்துக்களை விட கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படுவது கோவை, உதகை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்துள்ளது. 



குறிப்பாக இரவு நேரங்களில் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் சிக்கி அதிகளவிலான நாய்கள் நெடுஞ்சாலைகளில் இறப்பது தொடர்கதையாகி விட்டது. மேலும், உயிரிழந்த கால்நடையின் உடலின் மீது மோதும் போது வாகனத்தில் செல்பவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். 

கோவை மாவட்டத்தில் சாலையில் மட்டுமல்லாமல் ரயில்வே தண்டவாளங்களிலும் கால்நடைகள் சுதந்திரமாக திரிகின்றன. இதில் சில கால்நடைகள், வன விலங்குகள் மீது ரயில் மோதி பலியாகும் சம்பவங்களும் ஆங்காங்கே அடிக்கடி நிகழ்கின்றன. தண்டவாளத்தை கடக்கும் மாடுகள் மீது ரயில்கள் மோதி அதன் இன்ஜின் பழுதான சம்பவங்களும் கோவையில் உள்ளன. தெருக்களில் நாய்கள் தொல்லை இருந்தால் அவற்றை பிடிக்க ஆர்வம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம், மாடுகள், குதிரைகளை கண்டுக்கொள்வதில்லை.



மேலும், உதகை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் குதிரை சவாரியில் பயன்படுத்தப்படும் குதிரைகளும் காலப்போக்கில் வயதான பின் சாலையில் விடப்படுகின்றன. இவை கேட்பாறின்றி ஆங்காங்கே சுற்றி வருகின்றன. இதனிடையே, மாநகராட்சி நிர்வாகத்தால் தெருவில் சுற்றிவரும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அந்த சிகிச்சை முறையினையும் மாநகராட்சி தற்போது செயல்படுத்துவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மனிதனால் விலங்குகள் வதைக்கப்படுவதாக கூறி வாதாடிவரும் விலங்குகள் நல அமைப்புகளும், தன்னார்வ அமைப்புகளும் இவ்வாறான சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளின் மீதும் கனிவு காட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...