கோடக் மகிந்திரா வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் "811"

வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் கோடக் மகிந்திரா வங்கியின், 811 என்னும் வித்யாசமான எண் கைபேசி மூலம் முழுமையான சேவையை வழங்கும் டிஜிட்டல் வங்கியியல் திட்டமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குச் சிந்தனையில் உதித்த டிஜிட்டல் நியூ இந்தியாவின் 811 வாடிக்கையாளர் பயன்பாட்டிற்கு எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கும், ஜீரோ கட்டணங்களுடன் ஜீரோ கையிருப்பு சேமிப்புக் கணக்கை 811 வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குக் கையிருப்புத் தொகையின் மீது ஆண்டுக்கு 6 சதவிகிதம் வட்டி பெறலாம். 811 மூலம் கோடக் தனது வளர்ச்சித் திட்டத்தை மேம்படுத்தி நிறைவான சேவைகளை வழங்கும். 



இந்தியா முழுவதும் சுமார் 700 இடங்களில் முழுமையான டிஜிட்டல் மற்றும் காகிதமில்லா கணக்கைத் துவங்கும் அனுபவத்தை 811 வழங்குகிறது. இந்தியாவின் முன்னணி வங்கியியல் செயலியான கோடக் கைபேசி வங்கியியல் செயலி மூலம் 5 நிமிடங்களில் எங்கிருந்தும், எந்நேரமும் கணக்கைத் துவங்கலாம். கைபேசி மூலம் கணக்கைத் துவங்க ஆதார் அடிப்படையிலான ஓடிபி சான்றளிக்கப்பட்ட செய்முறையை முதன் முதலில் கோடக் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 811 துவங்கவும், இயக்கவும், ஆதார் மற்றும் பான் எண்கள் மட்டுமே போதும்.

கூகிள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலி ஸ்டோர் ஆகிய இரண்டிலும் இப்போது 811 கிடைக்கும். கோடக் கைபேசி வங்கியியல் செயலிக்கு **811 மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் உடனடியாகக் கைபேசியில் இதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



இதுகுறித்து கோடக் மகிந்திரா வங்கி முதன்மை டிஜிட்டல் அதிகாரி தீபக் சர்மா கூறுகையில், கைபேசியில் மிகச் சிறந்த வங்கியியல் அனுபவத்தை வழங்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் 811 வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களும், ஜீரோ கட்டணங்களுடன் கூடிய ஜீரோ பேலன்ஸ் கணக்கை வழங்கும் முழுமையான சேவை ஆகும். சேமிப்புக் கணக்கு கையிருப்பின் மீது 6 சதவிகிதம் வட்டியையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...