கோவை குறிச்சி மற்றும் சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவையில் குறிச்சி மற்றும் சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19 அன்று காலை 9 மணி முதல் மாலை வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை குறிச்சி மற்றும் சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (செப்டம்பர் 19) பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

குறிச்சி துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது: சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி. காலனி, மற்றும் மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி).

சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது: சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் (ஒரு பகுதி), செல்வபுரம், அண்ணா நகர், ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு (ஒரு பகுதி).

பொதுமக்கள் இந்த மின்தடை அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்களது அன்றாட வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...