உக்கடம் புல்லுக்காட்டில் புதிய விளையாட்டு மைதானம் திறப்பு: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

கோவை உக்கடம் புல்லுக்காட்டில் ரூ.6.90 லட்சம் மதிப்பீட்டில் 1.09 ஏக்கர் பரப்பளவில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று (23.09.2024) இதனை திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி உக்கடம், புல்லுக்காடு, சூரிய மின்னாற்றல் உற்பத்தி மையம் (Solar Power Plant) அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.09.2024) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., மற்றும் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்குட்பட்ட உக்கடம், புல்லுக்காடு பகுதியில் ரூ.6.90 இலட்சம் மதிப்பீட்டில் 1.09 ஏக்கர் பரப்பளவில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1.00 ஏக்கர் பரப்பளவிற்கு மண்மேடுகள் சமன் செய்யப்பட்டு, குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.



270.00 மீட்டர் நீளத்திற்கு முள்கம்பிவேலி உடன் கூடிய இரும்பு கதவுடன் கூடிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



திறப்பு விழாவிற்கு முன்னதாக, விளையாட்டு மைதான வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மேயர், மாநகர காவல் ஆணையாளர், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.



மேலும், சுமார் 86-வருட பாரம்பரியமிக்க மரம் மறுநடவு செய்யப்பட்டதையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மண்டல உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் அகமதுகபீர், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் சுந்தர்ராஜன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.45க்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையம் எதிர்ப்புறம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மேற்கு மண்டல குழுத்தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் து.சு.துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் வீரன், இளம்பொறியாளர் ஹரிபிரசாத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...