ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவு திறப்பு: அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்பு

கோவையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய இப்பிரிவு மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும்.



கோவை: கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள் கொண்ட 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.



மேலும், குப்புசாமி நாயுடு அறக்கட்டளை துணைத்தலைவர் R.கோபிநாத், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி Dr.ரகுபதி வேலுசாமி, ஜி.கே.என்.எம் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், "தமிழகத்தின் மருத்துவத்துறை அடையாளங்களில் ஒன்றாக ஜி.கே.என்.எம் மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை பத்தாண்டுகளுக்கு முன்னரே புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய மருத்துவ மையமாகும்" என்றார்.

"முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கடந்த ஆண்டு, ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் 18 வயது நிரம்பிய அனைத்து பொதுமக்களுக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டது. இதில் 110க்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் 38 வருவாய் மாவட்டங்களிலும் புற்றுநோய் கண்டறியும் பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், "மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, கலைஞரின் வருமுன் காப்போம், பாதம் பாதுகாப்போம் உள்ளிட்ட 36 திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத தனித்துவமான திட்டங்களாகும்" என்றார்.

"இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 1 லட்சம் ரூபாய் தொகை விரைவில் 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்" என்றும் அவர் அறிவித்தார்.

இறுதியாக, புற்றுநோய் மற்றும் இருதய பாதிப்புகளுக்கான நடவடிக்கையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...