கோவை மேயரின் கவுன்சிலர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்த மேயர் ரங்கநாயகியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் பிரபாகரன் அடுத்த மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியும்.


கோவை: கோவை மாநகராட்சி கூட்டத்திலிருந்து 47-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து மேயர் ரங்கநாயகி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 3 அன்று ரத்து செய்தது.

செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு ஸ்டிக்கர் அரசாக இருந்து வருவதாகவும், எந்த ஒரு புதிய திட்டத்தையும் வழங்காமல் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை மட்டுமே நிறைவேற்றி வருவதாகவும் விமர்சித்தார்.

இதனால் இரு கட்சி கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான விவாதம் மாமன்றத்தில் ஏற்பட்டது. இதையடுத்து, பிரபாகரன் அடுத்த 3 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டிருந்தார்.

தன்னை சஸ்பெண்ட் செய்த நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி, பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கோவை மேயர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அக்டோபர் 3 அன்று மேயர் பிறப்பித்த உத்தரவை தடை செய்து நீதிமன்றம் ஆணையிட்டது. இதன் மூலம் பிரபாகரன் அடுத்த மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...