மரங்களை காப்பாற்றவும், நீர் சேமிப்பு குறித்தும் கோவையில் பசுமை மாரத்தான் போட்டி!

முன்னாள் தேசிய படை மாணவர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து பசுமை மாரத்தான் போட்டியை நடத்தினர். மரங்களை காப்பாற்றவும், நீர் சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி நடைபெற்றது. கோவை பந்தய சாலையில் இன்று காலை 6 மணியளவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியினை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். 



பசுமை மாரத்தான் போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக தனித் தனியாக நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 13 வயதிற்குட்பட்டோருக்கும், 13 வயதிற்கு மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் என போட்டிகள் இரு பிரிவில் நடைபெற்றது. இப்போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக ரூபாய் 5000, இரண்டாம் பரிசாக ரூபாய் 2000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.



இதில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்கள் தமிழ்மகன், அசோக்குமார், நிர்வாஸ், பிரகாஷ், ஆனந்த், சுதன் மற்றும் முன்னாள் தேசிய படை மாணவர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...