கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க 18002021989 என்ற கட்டணமில்லா எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த சேவை அலுவலக நேரங்களில் கிடைக்கும்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (அக்டோபர் 9) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2023-24 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மாநில கோரிக்கையின் போது, அமைச்சர் அளித்த அறிவிப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க சட்ட ஆலோசனைகள் வழங்கவும், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஜாதி வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தகவல் தெரிவிப்போர், வழக்கு பதிவு செய்தல் மற்றும் முறையீடுகளை, 18002021989 என்ற கட்டணமில்லா எண்ணை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம். இந்த சேவை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் கிடைக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்குவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...