மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு மது பாட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர்


குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக மதுபானக் கடையினை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவில் மற்றும் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் மது பாட்டில்களுடன் தரையில் படுத்து புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இது குறித்து அவர்கள் கூறுகையில், கோவை ஆவரம்பாளையம் பகுதியில் கோவில் மற்றும் குடியிருப்பு, தொழிற்சாலைகள் உள்ள இடத்தில் மதுபான கடை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அங்கு இருந்த மதுக்கடையை போராட்டம் நடத்தி கடை அப்புறபடுத்திய நிலையில் மீண்டும் அங்கு கடை அமைந்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும் தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்" இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...