கோவையில் நில மோசடி: அதிமுக எம்எல்ஏ, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் மீது புகார் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியால் பரபரப்பு

கோவை கீரணத்தம் பகுதியில் 7.9 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டதாக குடும்ப வாரிசுகள் புகார். அதிமுக எம்எல்ஏ, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர், ரியல் எஸ்டேட் நிறுவனர் மீது குற்றச்சாட்டு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சியால் பரபரப்பு.


கோவை: கோவை கீரணத்தம் பகுதியில் காளிகோனார் என்பவருக்கு சொந்தமான 7.9 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டதாக குடும்ப வாரிசுகள் புகார் அளித்துள்ளனர். இந்த நில மோசடியில் சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ஜெயராம், பாஜக முன்னாள் கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, ஸ்ரீவாரி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காளிகோனாரின் வாரிசுதாரர்கள் 30 பேர் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த நில மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தனர். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையிலும் அந்த நிலத்தை விற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

தங்கள் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, காளிகோனாரின் வாரிசுதாரர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர்.



அப்போது, வாரிசுதாரரான ஒரு பெண் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு அவரை தடுத்து, தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.



வாரிசுதாரர்கள் பேசுகையில், "உடனடியாக மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை நிலம் சம்பந்தமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடாத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.



மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் தெரியுமா என்று கேள்வி எழுப்பிய வாரிசுதாரர்கள், ஹிந்தியில் சத்தமாக தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அதிமுக எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோரை திருடர்கள் என்று குற்றம்சாட்டிய அவர்கள், தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...