மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC, VMC இயந்திர Hour Rate கட்டணங்களை 15-30 சதவீதம் உயர்த்த TAGCT, CODMA தொழில் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றின. உற்பத்தி நிறுவனங்கள் கட்டணத்தை ₹300-ல் இருந்து ₹130 வரை குறைத்ததால் தொழில் முனைவோர் பாதிப்பு.


Coimbatore: மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 



இதுகுறித்து 'டாக்ட்' தொழில் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, கோவையில் 'ஜாப் ஒர்க்'செய்யும் தொழில் முனைவோர் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான குறுந்தொழில் முனைவோர் 'சிஎன்சி', 'விஎம்சி' இயந்திரங்களை வங்கிகளில் கடன் மூலம் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அனைவருக்கும் 'ஜாப் ஒர்க்'கிடைக்காத சூழ்நிலையை பயன்படுத்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் 'சிஎன்சி' இயந்திரங்களுக்கு Hour Rateகட்டணத்தை 300 ரூபாய்க்கு 130 ரூபாய் வரை கட்டணத்தை குறைத்து கொடுப்பதால் 'ஜாப் ஒர்க்' செய்யும் தொழில் முனைவோர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர் 'ஜாப் ஒர்க்' தொழில் முனைவோருக்கு உரிய முறையில் இயந்திர கட்டணத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும். இது தொடர்பாக எங்கள் அலுவலகத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



'காட்மா' தொழில் அமைப்பின் தலைவர் சிவக்குமார் கூறும்போது, மூலப் பொருட்களை விலை உயர்வு, வரி அதிகம் செலுத்துதல், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வாடகை அதிகம் நிர்ணயிக்கப்படுவது,தொழிலார்களுக்கான ஊதியம் அதிகரித்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் குறுந்தொழில் முனைவோருக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் 'ஜாப் ஒர்க்' அடிப்படையில் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள் லாபம் இல்லாத நிலையில் செயல்பட்டு வரும் அவல நிலை காணப்படுகிறது.

எனவே 'ஜாப் ஒர்க்' தொழில் நிறுவனங்கள் இயந்திரங்களுக்கான 'Hour Rate' 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தினால் மட்டுமே தொழிலில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் அலுவலகத்தில் நடந்தகூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். 

மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...