கோவை மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பெண்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி முகாம்


பெண்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதும், முறையான பயிற்சி பெறுவதற்குமாக அவர்களுக்கு இலவச பயிற்சி முகாமை கோவை மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.



இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பழகுநர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள போக்குவரத்து பூங்காவிக் நடைபெற்றது.



இதில் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) லட்சுமி, துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு பழகுநர் உரிமங்களை வழங்கினர்.



தொடர்ந்து, காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பேசுகையில், 'தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சாலை விபத்துகளில் மட்டும் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளில் நடக்கும் விபத்துகளில் பலியாவோர் எண்ணிக்கையை விட இது அதிகமாக உள்ளது. எனவே, அனைவரும் சாலை விதிகளை கடைபிடித்து சரியான முறையில் வாகனங்களை இயக்க வேண்டும். வாகன ஓட்டிகள் அல்லாது, பாதசாரிகளுக்கும் விதிமுறைகள் உள்ளது. அனைத்து தரப்பினரும் சாலை விதிகளை கடைபிடித்தால் தான் விபத்துக்களை குறைக்க முடியும்' என்றார்.



இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...