கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் தற்காலிகமாக கொச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: இன்று மாலை கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் கிளைகள் சாய்ந்து விழுந்தன. இதன் தொடர்ச்சியாக, கோவை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை நோக்கி வந்த சில விமானங்கள் தற்காலிகமாக கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு பணிக்காக சிஐஎஸ்எஃப் வீரர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இரவு 9.30 மணிக்குப் பிறகு நிலைமை சீரடையும் என்றும், அதன் பின்னர் கோவை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...