3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படாததால், அதை உடனடியாக நடைமுறைப்படுத்த ‘டாக்ட்’ தொழில் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Coimbatore:

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கம் (TACT) சார்பில் நடைபெற்ற கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின்இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கும் மின்வாரியத்திற்கும் வலியுறுத்தப்பட்டது.



இடையர்பாளையத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் பிரதாப் சேகர் மற்றும் பொருளாளர் லீலா கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், கோவை மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.



மேலும், 12 கிலோவாட்டிற்குள் செயல்படும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த LT-3B மின்இணைப்புகளை LT-3A-1 பிரிவிற்கு மாற்ற தமிழக அரசு கடந்த 2023ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும் மின்வாரியம் இதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றும், இதனால் குறுந்தொழில் முனைவோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். உடனடியாக மின்இணைப்பு மாற்ற நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், சீரநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் சீராக இல்லாததால் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இயந்திரங்களுக்கான முதலீட்டு மானியம் பெற பல ஆண்டுகளாக காத்திருக்கும் தொழில்முனைவோரின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து மானியங்களை வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...