கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500 வரை கட்டாயமாக “டிப்ஸ்” கேட்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்காக வழங்கப்படும் இலவச வீல்சேர் சேவைக்கு சில ஊழியர்கள் கட்டாயமாக பணம், அதவாது “டிப்ஸ்” கேட்பதாக பயணிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.




கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினசரி சராசரியாக 31 முதல் 32 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறை காலத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.




பயணிகளின் வசதிக்காக விமான நிறுவனங்கள் சார்பில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் பயன்பெறும்படி வீல்சேர் சேவை முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த சேவையை வழங்கும் சில ஊழியர்கள் குறிப்பிட்ட தொகையை கேட்டு பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




இதுகுறித்து பயணிகள் கூறுகையில், "வீல்சேர் சேவை மிகவும் பயனுள்ளதாகவும், உதவிகரமாகவும் உள்ளது. ஆனால், சில ஊழியர்கள் 'இது இலவச சேவைதான், இருந்தாலும் ரூ.500 வரை டிப்ஸ் கொடுக்கலாம்' என்று தெரிவித்து மறைமுகமாக பணம் கேட்கின்றனர்.

பொதுவாக,பயணிகள் தங்கள் விருப்பத்துடன் உதவித்தொகை வழங்குவது வேறு விஷயம். ஆனால், இந்த சேவை குறித்து தெளிவாக தெரியாதவர்களிடம், குறிப்பாக வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளிடம் கட்டாயப்படுத்தி பணம் கேட்பது முற்றிலும் தவறானது," என்று கூறினர்.




மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க விமான நிறுவன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் கண்டிப்பான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இதுகுறித்து, விமான நிலைய மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "வீல்சேர் சேவை முழுமையாக இலவசம். இதற்காக எந்தவொரு பயணியிடமும் கட்டாயமாக பணம் கேட்பது முற்றிலும் தவறான செயல். யாரேனும் ஊழியர்கள் பணம் கேட்டால் அல்லது வற்புறுத்தினால், சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகளிடம் அல்லது விமான நிலைய மேலாண்மை அலுவலகத்தில் பயணிகள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தனர்.


Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...