மின்தடை புகார்களுக்கு ‘மின்னகம்’ சேவையை பயன்படுத்த மின்வாரியம் அறிவுறுத்தல்

மின்தடை,!ஃபியூஸ் ஆஃப் கால் (FOC), குறைந்த மின்னழுத்தம் மற்றும் பிற மின்விநியோக குறைபாடுகள் தொடர்பான புகார்களை, 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை, ஜூன் 5: மின்தடை மற்றும் மின்விநியோகம் தொடர்பான புகார்களை பதிவு செய்ய பொதுமக்கள் ‘மின்னகம்’ (Minnagam) சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) சுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் தங்களின் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும், குறிப்பாக ஃபியூஸ் ஆஃப் கால் (FOC), மின்தடை, குறைந்த மின்னழுத்தம் மற்றும் பிற மின்விநியோக குறைபாடுகள் தொடர்பான புகார்களையும் 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் ‘மின்னகம்’ சேவையை அதிகளவில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...