அப்போது இருந்து இப்போது வரை அப்படியே இருக்கும் புரூக்பாண்ட் மேம்பாலம்!

கோவை மாவட்டம் நஞ்சப்பா சாலை அடுத்து அமைந்துள்ள புரூக்பாண்ட் சாலை மேம்பாலமானது மிகவும் பிரசிதிபெற்ற போக்குவரத்து நெரிசல் நிறைந்த மேம்பாலமாகும். ஆர்.எஸ்.புரம், நஞ்சப்பா சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராம்நகர், அவிநாசி சாலை, உக்கடம் பகுதியை இணைக்கும் இப்பாளத்தினை நாள்தோறும் ஆயிரக் கணக்காகோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் அவ்வப்போது பெய்துவரும் மழையின் காரணமாக புரூக்பாண்ட் பாலத்தின் கீழ் வழித்தடத்தில் மழை நீரும், சாக்கடை நீரும் தேங்கி வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையே நீடித்து வருகிறது.



இந்த வழித்தடத்தில் கார்களும், இருசக்கர வாகனங்களும் செல்லும் நிலையில், வாகனங்கள் வேகமாக செல்வதால் மழை நீருடன் கலந்த சாக்கடை நீர் வாகன ஓட்டிகள் மீது தெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.



இதனிடையே, இன்னும் ஒரு சில மாதங்களில் பருவ மழை பெய்யவுள்ளதால் புரூக்பாண்ட் மேம்பாலத்தின் கீழ் வழித்தடத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

இதுகுறித்து அப்பகுதி வாகன ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், எனது சிறு வயது காலம் முதலே புரூக்பாண்ட் மேம்பாலத்தின் அவினாசி சாலை செல்லும் கீழ் வழித்தடத்தில் மழைக்காலங்களில் இந்த நிலையே நீடித்து வருகிறது. ஒரு சில நேரங்களில் வாகன ஓட்டிகளே மூழ்கிவிடும் அளவிற்கு மழை நீர் இங்கு தேங்கி நிற்கும். 



மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு முறை கனமழை பெய்யும்போது இயந்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைப்பர். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...