ஆசிய அளவில் யோகாவில் இரு தங்கப் பதக்கம் வென்ற பார்க் பள்ளி மாணவி வைஷ்ணவி

பார்க் குளோபல் பள்ளி மாணவி வைஷ்ணவி தாய்லாந்தில் ஆசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் இரு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்ததற்கு கோவையில் உள்ள கேரளா கிளப்-யில் பாராட்டு விழா நடைபெற்றது.

தாய்லாந்தில் மே 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.



இதில், இந்தியாவில் இருந்து 15 மாணவர்கள் ஜூனியர் நிலையில் கலந்து கொண்டு தங்களது யோகா திறமையினை வெளிப்படுத்தினர். இதில், பார்க் குளோபல் பள்ளி மாணவி வைஷ்ணவி முதல் பரிசாக தங்கப் பதக்கத்தை வென்றதோடு, ஒட்டுமொத்த முதல் பரிசாக சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.

மாணவி வைஷ்ணவி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், தேசிய, மாவட்ட அளவில் 200-க்கும் அதிகமான தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். சர்வதேச அளவில் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.



இவருக்கு "யோகா ராணி", "யோகா நட்சத்திரா" போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர "இளம் சாதனையாளர் விருது", "யோகா கலைமாமணி" விருதுகளையும் பெற்றுள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகளிலும் இவரது யோகா செயல்திறன் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

கடந்த 2016 செப்டம்பர் 26ம் தேதியன்று நடைபெற்ற 3-வது காண்வெல்த் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இவர், 30 நிமிடங்களில் 596 ஆசனங்களையும், ஒரு நிமிடத்தில் 47 ஆசனங்களையும் செய்து இந்திய சாதனை புத்தகத்திலும், ஒரு நிமிடத்தில் 64 ஆசனங்களை செய்து ஆசிய உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

மாணவி வைஷ்ணவி, இதுகுறித்து பத்திரிகையாளர்களுடன் பேசுகையில், இவரது இலக்கு கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதாக கூறினார். மேலும், இவரது வெற்றிக்கு பள்ளியில் அளிக்கப்பட்ட தனித்துவமான முக்கியத்துவமே காரணம் என்றும், பார்க் குளோபல் பள்ளி என்றுமே மறைந்திருக்கும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர தவறியதில்லை எனவும் கூறினார்.



மேலும், தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, இவருக்கு இலவச கல்வி, ஜிம்னாஷ்டிக் பயிற்சிக்கு உதவி அளிப்பதாகவும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு உதவிவருவதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, பார்க் குளோபல் பள்ளியின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி வைஷ்ணவியை பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும், யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அனைவரும் யோகா பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...