சையானுக்கு தற்போது அறுவை சிகிச்சை தேவையில்லை- கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ரங்கநாதன் பேட்டி


நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சையான் என்பவர் கடந்த இரு வாரத்திற்கும் மேலாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 



இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சயான் நேற்று இரவு 11.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் ரங்கநாதன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

சயானுக்கு தேவையான மேல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எலும்பு, குடல் மற்றும் உடல் நோய் தொடர்பான சிகிச்சைகள் சீராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயங்கள் சரியாகி வருகிறது. இங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சயானுக்கு தற்போது எந்த அறுவை சிகிச்சையும் தேவையில்லை. உரிய மருத்துவர்களிடம் ஆலோசித்த பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...