சிங்காநல்லூர் பேருந்துநிலையம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் கடையை அடைத்து நொறுக்கிய மார்க்சிஸ்ட் கட்சியினர்

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்றதும், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் மட்டும் வெளியூர் மக்கள் வந்து செல்வர். 



இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி உத்தரவிட்டது. இதில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தின் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையும் அடங்கும். 



அதன்படி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இருப்பினும், அந்த டாஸ்மாக் கடையில் கள்ளத்தனமாக தினமும் மது விற்பனை தொடர்ந்துகொண்டே வந்தது. 



இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சிங்காநல்லூர் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல முறை புகார் அளித்து வந்தனர். எனினும் அரசு அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதில் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து இன்று காலை 11.30 மணியளவில் சிங்காநல்லூர் டாஸ்மாக் கடையினையும் அங்கிருந்த மதுபாட்டில்களையும் அடித்து நொறுக்கினர்.



இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிங்காநல்லூர் காவல்நிலையத்தின் அருகிலேயே இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. தமிழக காவல்துறை டாஸ்மாக் கடைகளுக்கு அரணாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, டாஸ்மாக் கடை நிர்வாகத்தை தன்னிச்சையாக செயல்பட அனுமதித்ததே இதற்குக் காரணம். இந்த கடை நடத்த இடமளித்த கட்டிட உரிமையாளர் மீதும், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...