மீண்டும் கழிவு நீரால் தேங்கிய கிக்கானி மேம்பாலம் மாநகராட்சி புதிய முயற்சி மேற்கொள்ளுமா?

கோவையில் மழை பெய்தால் மட்டுமே கிக்கானி பள்ளி அருகே உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கும். ஆனால் சாக்கடை கழிவு நீரால் தரைபாலம் முழுவது நிரம்பி வழிந்தது. இதனால் போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இந்த பாலத்தின் அருகே உள்ள பாதாள சாக்கடைக் குழாயில் தொடர்ந்து ஒரு மாதமாக தினமும் கழிவுநீர் உடைப்பெடுத்து வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது பொங்கிப் பெருகும் கழிவுநீர், பாலத்தில் அடியில் தேங்கி வாகனங்களை மூழ்கடித்து வருகிறது. அங்குள்ள மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நிரந்தரமான தீர்வுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



இதன் விளைவு, முன்தினம் ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் வழக்கம்போல பாதாளச் சாக்கடை குழாயில் இருந்து வெளியேறிய கழிவு நீர், மேல்பக்க மூடியை திறந்து கொண்டு பெருக்கெடுத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் ரயில்வே பாலம் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது. காலை 11 மணியளவில் பாலம் முழுவதும் கழிவுநீரால் மூழ்கியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. பிரச்சினை அதிகமாகிவிட்டதால், உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் குழாய் உடைப்பை சரிசெய்வார்கள் என மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் மாநகராட்சி தரப்பில் இருந்து யாரும் வராததால் வேறு வழியின்றி போலீஸார் அந்த சாலையை அடைத்தனர். 



பின்னர், ஞாயிறு அன்று மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் சரிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று கோவையில் பொய்த மழையால் காலையில் மழைநீர் அப்பகுதியில் தேங்கியது. 11 மணியளவில் மீண்டும் அந்த சாக்கடை கழிவு நீர் வெளிவர ஆரம்பித்தது. மீண்டும் சுகாதார அலுவலர்களால் மோட்டர் மூலம் கழிவு நீரை உறிஞ்சி அப்புறப்படுத்தினர். பாதாள சாக்கடைக் குழாய் அடைப்பை சரி செய்வதோடு, ரயில்வே பாலத்தின் கீழே மழைநீர் வடிகால் அமைத்தால் மட்டுமே இப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.



இது குறித்து மேற்கு மண்டல சுகாதார அலுவலரிடம் தொடர்பு கொண்டபோது; ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது அருகில் உள்ள பகுதிகளில் உள்ள மண் மற்றும் குப்பை இந்த பலத்திற்கு செல்வதால் மழைநீர் வடிகாலில் மண் தேங்கி நிற்கின்றது. இதனால் மழைநீர் இப்பகுதியில் தேக்கம் ஏற்படுகிறது. பலத்தின் இந்த வேலைக்கான பணிகள் மேற்கொள்ள ரயில்வே துறையிடம் அனுமதி கோரவேண்டும். இல்லையென்றால், தற்போது பயன்படுத்தப்படும் மோட்டர் மூலம் மட்டுமே மழைநீரை வெளியேற்ற முடியும். புதிய முயற்சியாக தற்போது லங்கர் கார்னர் பாலத்தில் மழைநீர் வடிகால் வேலை நடைபெறுவதை போல் இங்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...