ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு

ஹோட்டல் பொருட்கள் மீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்டித்தும், அதனை குறைக்க வலிறுத்தியும் வருகிற மே 30 ஆம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்து உள்ளதாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.



கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

மத்திய அரசு வரும் ஜூலை மாதம் அமல்படுத்த உள்ள பொதுவான சரக்கு மற்றும் சேவை வரியில் உணவகங்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது ஏசி ரெஸ்டாரண்ட்டுகளுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதனால் உடனடியாக ஹோட்டல் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினை குறைக்க வலியுறுத்தி வருகிற மே 30 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பேக்கரி மற்றும் உணவகங்கள் அடைக்கப்பட உள்ளன. இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஒன்றரை லட்சம் கடைகள் அடைக்கப்பட்டு ஆதரவளிக்க உள்ளன. மேலும், இப்போராட்டத்தின் காரணமாக 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட உள்ளது என கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...