ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு

ஹோட்டல் பொருட்கள் மீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்டித்தும், அதனை குறைக்க வலிறுத்தியும் வருகிற மே 30 ஆம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்து உள்ளதாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.



கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

மத்திய அரசு வரும் ஜூலை மாதம் அமல்படுத்த உள்ள பொதுவான சரக்கு மற்றும் சேவை வரியில் உணவகங்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது ஏசி ரெஸ்டாரண்ட்டுகளுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதனால் உடனடியாக ஹோட்டல் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினை குறைக்க வலியுறுத்தி வருகிற மே 30 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பேக்கரி மற்றும் உணவகங்கள் அடைக்கப்பட உள்ளன. இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஒன்றரை லட்சம் கடைகள் அடைக்கப்பட்டு ஆதரவளிக்க உள்ளன. மேலும், இப்போராட்டத்தின் காரணமாக 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட உள்ளது என கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...