அஇஅதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், கோவை வடக்கு எம்.எல்.ஏ பிஆர்ஜி அருண்குமார், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, மேட்டுபாளையம் எம்.எல்.ஏ. ஒ.கே.சின்ராஜ் மற்றும் கவுன்சிலர் அசோக் குமார்  ஊள்ளிட்டோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அதிமுக இரு அணிகள் இணைப்பே வேண்டாம், உங்களுடன் இணைந்தால் எங்களுக்கு மரியாதை இருக்காது பணம், பதவிக்காக சசிகலா குடும்ப அணிக்கு சென்ற 122 எம்.எல்.ஏக்களும் பல பிரிவுகளாக இயங்குகின்றனர். ஒரே தலைமையின் கீழ் ஒபிஎஸ் அணி இயங்குகிறது இரண்டு முறை.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஒபிஎஸ். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் ஒபிஎஸ் அணி வெற்றி பெறும். கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளையும் ஒபிஎஸ் அணி கைப்பற்றும். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறும் என்றார்.

பின்னர், பேசிய மேட்டுபாளையம் எம்.எல்.ஏ ஒகே.சின்ராஜ், மறைந்த முதல்வர் ஜெயலலிதா எண்ணங்களுக்கு விரோதமாக ஆட்சி நடக்கிறது ஜெ உயிருடன் இருந்த போது, அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் கையில் ஆட்சி உள்ளது இரண்டு அணிகள் இணைப்பு தொடர்பாக இதுவரை அழைப்பு இல்லை இரு அணிகள் இணைப்பு என எடப்பாடி அணியினர் கபட நாடகம் ஆடுகின்றனர் எடப்பாடி அணியுடன், ஒபிஎஸ் சேர்ந்தால் ஒபிஎஸ்க்கு வளர்ச்சியாக இல்லாமல் வீழ்ச்சியாக அமையும் என்றார்.



அதனை, தொடர்ந்து பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏக்கள் தொடக்கி வைத்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...