டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் உண்ணாவிரதம்

டாஸ்மாக் ஊரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் , டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று அரசுப்பணி வழங்கக் கோரியும் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்  இன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.



மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களால்  சில இடங்களில் மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்படுகிறது. மேலும், அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்.

இதனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோவை சிவானந்தா காலனி பகுதியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



மேலும், இந்த போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவை அடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கு மாற்றுப் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பணி வழங்க வேண்டும் எனவும் வலியுத்தினர். மேலும், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து மற்ற அரசு பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...