கோவையில் டாஸ்மாக் கடைகளை அடைக்க கோரிய பொதுமக்களின் போராட்டம் வெற்றி


கோவை சவுரிபாளையம் பகுதியில் 2 கிமீ சுற்றளவுக்குள் நான்கு டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என சவுரிபாளையம் பகுதி மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், டாஸ்மாக் கடைகள் அகற்றப்படாததை தொடர்ந்து இன்று மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் அறிவித்திருந்தனர். தொடர்ந்து, வரும் ஜுன் 4-ம் தேதி டாஸ்மாக் கதவடைப்பு போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்திருந்தனர்.



இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி 500-க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் பார் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்ற மக்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



இதை தொடர்ந்து, அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், போராட்டத்தை கைவிடுமாறு பொதுமக்களை வலியுறுத்தினர். ஆனால், கலைந்து செல்ல மறுத்த பொதுமக்கள் அதிகாரிகள் வந்து கடைகளை மூடுவதாக உறுதியளிக்க வேண்டும் என்றும் உறுதி வழக்கப்படாவிட்டால் போராட்டம் கைவிடப்படமாட்டாது என்றும் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதை தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த டாஸ்மாக் அதிகாரி விஜயசண்முகம் மற்றும் கோவை தெற்குப்பகுதி தாசில்தார் பக்தவச்சலம் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், வரும் 3-ம் தேதிக்குள் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என்று உறுதியளித்தனர். 

இதை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...