மத்திய அரசு கால்நடைகளின் மீது விதித்துள்ள தடையினை நீக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் மனு


விவசாயிகளை பாதிக்கும் வகையில் மாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சிரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:- விவசாயிகளின் வாழ்வாதாரம் உணவு உற்பத்தி மற்றும் பிரதான வளர்ச்சியின் உற்ற துணையாக கால்நடை வளர்ப்பு இன்றுவரை இருந்து வருகிறது. மத்திய அரசு 2017 கால்நடை சந்தை ஒழுங்குமுறை விதிகள் என்ற தடை மூலம் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. அனுமதி பெறாமல் விற்பனை செய்வது, கால்நடைகளின் கொம்புகளில் வர்ணம் பூசக்கூடாது மற்றும் தலை, கழுத்து ஆகியவற்றில் மூக்கணாங்கயிறு அணிவிக்கக் கூடாது போன்ற பல்வேறு தடைகளை மத்திய அரசு சட்டத்தின் மூலம் கொண்டுவந்துள்ளது.



சுதந்திரமாக கால்நடைகளை வளர்க்க வேண்டும் என்றும், கயிறு மூலம் கட்டக் கூடாது என்றும், வெறும் தரைகளில் கால்நடைகளை படுக்க வைக்கக் கூடாது என்றும் இத்தகைய நடைமுறை தொடர்ந்தால் மிருகவதை சட்டம் பாயும் என விவசாயிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை விவசாயிகள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

விவசாயிகளின் பாரம்பரியமான மாட்டுப் பொங்கள் மற்றும் திருவிழாக்களின் போதும், புதிய விடுகளின் கிரகபிரவேசத்தின் போதும் பசு மாடு மற்றும் கன்றுகள் பயன்படுத்தப்படுவதும், திருவிழாக்களின் போது மாடுகளை குளிப்பாட்டி வர்ணம் பூசுவது பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரம் ஆகும். இத்தகைய முறைகளை மாற்றக்கூடாது.

வறட்சியால் பாதித்துள்ள கால்நடைகளுக்கு உரிய தீவணங்கள், கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் தவிடு புண்ணாக்கு போன்றவற்றில் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் உப தொழில் வளர்ச்சிக்கு உந்து சக்தியான கால்நடைகளை பாதுகாக்க தனிச்சட்டம் உருவாக்க வேண்டும். இத்தகைய மேம்பாட்டை செய்யாமல் மத்திய அரசு தேவையற்ற விவசாயிகளின் எவ்வித கோரிக்கையும் இல்லாமல் விவசாயத்திற்கு எதிராக இத்தகைய சட்டத்தை ஏற்றியிருப்பது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.

இத்தகைய சட்டம் என்பது விவசாயிகளுக்கு எதிரான சட்டம். இச்சட்டத்ததை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...