டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிணத்துக்கடவு பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம் வடபுதூர் மற்றும் பொட்டையாபண்டிபுரம்பு ஆகிய கிராமத்து பகுதி மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-கிணத்துக்கடவு வட்டம், வடபுதூர் கிராமம், கிணத்துக்கடவில் இருந்து சொக்கனூர் மற்றும் சங்கராயபுரம், முத்துக்கவுண்டனூர் செல்லும் சாலை வழி சந்திப்பில் கல்லுக்குழி பேருந்து நிறுத்தம் அருகே ரத்தினசாமி என்பவருக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் 322 என்னும் எண் கொண்ட மதுபானக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இப்பகுதி, விவசாய நிலம் மற்றம் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இந்த டாஸ்மாக் கடையினை கடந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், பெண்கள், அருகில் உள்ள விவசாயிகள் செல்ல வேண்டும். டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்களுக்கு மதுகுடிக்க வருவோரால் இடையூறுகள் ஏற்படும்.

எனவே, மேற்குறிப்பிட்ட இடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...