ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு

விசைத்தறி தொழிலுக்கு 2014-யில் ஆன ஒப்பந்த கூலியை கேட்டு நடைபெற்ற விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதியன்று மாவட் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைந்த ஒப்பந்த கூலியை கொடுக்க வேண்டும் என்றும், இனி எக்காரணம் கொண்டும் ஒப்பந்த கூலியை குறைக்ககூடாது என்றும் ஒப்பந்த கூலியை குறைத்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து விசைத்தறியாளர்கள் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால், நான்கு வாரகாலம் கடந்தும் ஓரிரு ஜவுளி உற்பத்தியாளர்களைத் தவிர மற்ற ஜவுளி உற்பத்தியாளர்கள் இதுவரை ஒப்பந்த கூலி உயர்வை அமல்படுத்தவில்லை. 

இதேபோல், 2014-யில் ஒப்பந்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து வழங்கியதால் பலகட்ட போராட்டங்களுக்கும் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் பின் ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைந்த ஒப்பந்த கூலியை கொடுப்பதாக ஒப்புக் கொண்டு 22.2.2016-யில் கோவை, திரப்பூர் மாவட்ட அமைச்சர்கள், இரண்டு மாவட்ட ஆட்சியர்களால் அவிக்கப்பட்டது.

ஆனால், ஒருசில மாதம் மட்டம் கொடுத்துவிட்டு ஒப்பந்த கூலியை குறைத்து வழங்கியதால் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடியும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்த கூலி உயர்வு வழங்காமல் செயல்பட்டனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய கூலியை கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...