ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உணவகங்கள், மருந்தகங்கள் முழுஅடைப்பு போராட்டம்.

ஹோட்டல் பொருட்கள் மீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்டித்தும், அதனை குறைக்க வலிறுத்தியும் மே 30ம் தேதியன்று (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டன.



அதனைத்தொடர்ந்து, இன்று தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள உணவக உரிமையாளர்களும் தங்களது உணவகங்களை மூடி ஜிஎஸ்டி வரி அதிகரிப்பிற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.



அதன்படி, இன்று கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து உணவகங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் அம்மா உணவகம் மட்டுமே வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளதால் மக்களின் கூட்டம் அம்மா உணவகங்களில் அலைமோதி வருகிறது.



இதனிடையே, மருத்துவப் பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி வரி அதிகளவில் விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் மருந்தக உரிமையாளர்களும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹோட்டல், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் மற்றும் மருந்தக உரிமையாளர்களின் இந்த முழுஅடைப்பு போராட்டம் காரணமாக சுமார் 500 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...