ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உணவகங்கள், மருந்தகங்கள் முழுஅடைப்பு போராட்டம்.

ஹோட்டல் பொருட்கள் மீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்டித்தும், அதனை குறைக்க வலிறுத்தியும் மே 30ம் தேதியன்று (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டன.



அதனைத்தொடர்ந்து, இன்று தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள உணவக உரிமையாளர்களும் தங்களது உணவகங்களை மூடி ஜிஎஸ்டி வரி அதிகரிப்பிற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.



அதன்படி, இன்று கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து உணவகங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் அம்மா உணவகம் மட்டுமே வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளதால் மக்களின் கூட்டம் அம்மா உணவகங்களில் அலைமோதி வருகிறது.



இதனிடையே, மருத்துவப் பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி வரி அதிகளவில் விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் மருந்தக உரிமையாளர்களும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹோட்டல், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் மற்றும் மருந்தக உரிமையாளர்களின் இந்த முழுஅடைப்பு போராட்டம் காரணமாக சுமார் 500 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...