ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு மாநகராட்சிக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தும் தனியார் நிறுவனங்கள்- மாநகராட்சியின் நடவடிக்கை என்ன ?


கோவை மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட 1 முதல் 100 வார்டுகளில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் அனுமதியற்ற கட்டிடம் மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு வந்தது. கடந்த நவம்பர் மாதம் முதல் இன்றுவரை ரூபாய் 382.09 கோடி மதிப்பிலான 39.1 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் மீட்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



ஆனால், பொது ஒதுக்கீடு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவரின் பெயரையோ? முகவரியோ? பற்றிய எந்த முழுமையான தகவலையும் மாநகராட்சி நிர்வாகம் வெளியிடவில்லை.

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மாநகராட்சி இதுபோன்ற செயல்களில் தாமதப்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக கோவை மாநகராட்சியில் வசிக்கும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.



இதுகுறித்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், கோவை திருச்சி சாலை அருகில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 63-வது வார்டுக்குட்பட்ட திரு நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 41. 3 சென்ட் ரிசர்வ் சைட் பூங்கா ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்தை பிரபல கல்யாண மண்டப உரிமையாளர்கள் ஆக்கிரமித்து டைனிங் ஹால் அமைத்து பல வருடங்களாக பயன்படுத்திக் கொண்டு பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். இதற்கும் மாநகராட்சி அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது" என்றார்.



இது குறித்து கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் விமலா கூறுகையில், இந்த ஆக்கிரமிப்பு இடத்தை ஆய்வு மேற்கொண்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை கல்யாண மண்டப உரிமையாளர்கள் ஆக்கிரமித்து டைனிங் ஹால் கட்டியிருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, உரிய ஆவணத்தை தயார்படுத்தி மாநகராட்சி அலுவலர்களின் அனுமதியுடன் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேற்படி, மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடம் 41. 3 சென்ட் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் தகவல் கொடுத்தும் நகரமைப்பு அலுவலர்கள் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

எனவே, இதனை உடனடியாக கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாரந்தோறும் ரிசர்வ் சைட்களை மீட்பது குறித்த முழுமையான தகவலை மாநகராட்சி சார்பில் வெளியிட வேண்டும். மேற்படி பூங்கா இடத்தையும் மீட்க அதிகாரிகளுக்கு உத்திரவிட வழங்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...