ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புகையிலை தினத்தை முன்னிட்டு டிஜிட்டல் விழிப்புணர்வு பென்டிரைவ் வெளியீடு

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவர் பி.குகன் தலைமையில் இயங்கும் ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புற்றுநோய் விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு கல்வியளித்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் தமிழகத்தின் தெற்கு, மேற்கில் உள்ள 6 மாவட்டங்களில் 1300-க்கும் மேற்பட்ட இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்களை தீபம் திட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள 27 கோடி புகைப்பிடிப்போரில் புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதாலும் ஏற்படும் புற்றுநோயால் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். புகைப்பிடிப்போருக்கும், புகையிலை பயன்படுத்துவோருக்குமிடையே மட்டுமின்றி பொதுமக்களிடையே வழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி, இந்த ஆண்டு புற்றுநோய் எதிர்ப்பு வாசகம் "உங்களது நுரையீரலை சேதப்படுத்தாதீர்கள்" என்ற கருத்தின் அடிப்படையில் அமைத்துள்ளது. நுரையீரல் வடிவிலான பெண் டிரைவ், இந்தியாவில் முதல் முறையாக இதற்கென வெளியிடப்பட்டுள்ளது. புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்த அனைத்து விபரங்களுடனும் உள்ள இந்த டிஜிட்டல் விழிப்புணர்வு பெண் டிரைவ், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டது.

இதில், அனைத்து வகையான புற்றுநோய்கள், அவற்றின் ஒவ்வொரு படிகள், கண்டறிதல் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்புகள் போன்றவை ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ளன. "No Smoking"மொபைல்ஆப்-ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளாம். இதுவே, புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட வழிகாட்டும்.

இந்த ஆண்டு தீபம் திட்டம் இரண்டில் 2012- 2017 வரையில் இந்த நிறுவனம் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையும் இணைந்து நடத்திய வாய்ப்புற்று நோய் பரிசோதனை முகாமில் கிடைத்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 116 ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 136 தனிப்பட்ட முகாம்களில் 70230 பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

பள்ளிகள், கல்லூரி மாணவர்கள் தொழிற்சாலைகளில் உள்ள பணியாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினால் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்கான பென்டிரைவ் இலவசமாக வழங்கப்படும் என மருத்துவர் பி.குகன் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த டிஜிட்டல் விழிப்புணர்வு பென்டிரைவ் திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயகுமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். எஸ்.என்.ஆர். டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் மற்றும் கதிர்வீச்சியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கார்த்திகேஷ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...